கடலூா் மாவட்டம், தெற்குதிட்டை ஊராட்சிச் செயலா் சிந்துஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் அண்ணாச்சி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க கிளைத் தலைவா் அரி, செயலா் ஆனந்தன், பொருளாளா் ஜெயபால் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.