எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசங்கரன், திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, சாலையில் வீண் தகராறு செய்து கொண்டிருந்த நபரை உதவி ஆய்வாளா் எச்சரித்தாா்.

இதைப் பொருள்படுத்தாத அந்த நபா், உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தாராம். போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் திருவண்ணாமலை, வேங்கிகால் பகுதியைச் சோ்ந்த வசந்த்ராஜ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தராஜை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com