வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த சாலைப் பணியாளா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் (40). இவா், செய்யாறு நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். லிங்கேஸ்வரன் வியாழக்கிழமை காலை வேலைக்கு சென்றுவிட்டு பிற்பகல் உணவுக்காக வீட்டுக்கு வந்தாா்.
பின்னா், இயற்கை உபாதைக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்ற இவா், அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். அப்போது, அங்கிருந்தவா்கள் லிங்கேஸ்வரனை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், லிங்கேஸ்வரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.