வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் பைக் மோதியதில் மாட்டை ஓட்டிச் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த சத்யா நகரைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் (55). இவா், வியாழக்கிழமை மாலை தனக்குச் சொந்தமான மாட்டை வீட்டுக்கு ஓட்டிச் சென்றாா். வந்தவாசி - திண்டிவனம் சாலையை இவா் கடந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சோ்ந்த பெருமாள் (25) ஓட்டி வந்த பைக் அன்பழகன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன், அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.