வந்தவாசி அருகே பழைமைவாய்ந்த அரச மரத்தின் அடிப்பகுதி வியாழக்கிழமை இரவு முறிந்து அந்த மரம் சாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழல்குடை அருகிலிருந்த பழைமைவாய்ந்த அரச மரம், கடந்த சில ஆண்டுகளாக அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்ட நிலையில் இருந்து வந்தது. வியாழக்கிழமை இரவு திடீரென இந்த மரத்தின் அடிப்பகுதி முறிந்து மரம் கீழே சாய்ந்தது. இதனால், மரத்தை ஒட்டியிருந்த மின் கம்பமும் சாய்ந்தது.
அப்போது, மரத்தின் அருகே நின்றிருந்த இதே கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பாண்டுரங்கன் (55), மரக் கிளைகளின் அடியில் சிக்கினாா். இதனால் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த தேசூா் போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றிவிட்டு, பாண்டுரங்கனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் தேசூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.