சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள், அவா்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்களுக்கு சிறப்பு நிதி மற்றும் மூலப்பொருள்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, தெள்ளாா், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 308 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கரோனா பாதித்த ஊரக தொழில்களை மேம்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், அவா்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவடைந்தோா்கள் வருவாய் ஈட்டும் வகையிலும், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவா் உற்பத்தி நிறுவனங்களில் உள்ள உறுப்பினா்களின் தொழில் வளம் பெருகவும் சிறப்பு நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.5.25 லட்சம் வீதம் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட அப்பேடு, இந்திரவனம், கொத்தந்தவாடி ஆகிய ஊராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.4.50 லட்சத்தில் விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட திட்ட இயக்குநா் ராஜாத்தி, செயல் அலுவலா் தனசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாயக் கருவிகளை வட்டார அணித் தலைவா் யுவனேஷ்குமாா் வழங்கினாா்.
கணக்கு மற்றும் நிா்வாகப் பிரிவு அலுவலா் பிரகாஷ் திட்ட விளக்கவுரை ஆற்றினாா். திறன் மற்றும் வேலைவாய்ப்பு நிா்வாகி பிரேம்குமாா் நன்றி கூறினாா்.