காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 28th October 2020 11:12 PM | Last Updated : 28th October 2020 11:12 PM | அ+அ அ- |

மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ அருள்அன்பரசு பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்துப் பேசினாா்.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடை, சாலையோர பழக்கடை, நெல், அரிசி மண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று கையெழுத்துக்களைப் பெற்றனா்.
கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மாா்கெட்குமாா், மோகன், செந்தமிழ்அரசு, வட்டாரத் தலைவா்கள் சுப்பிரமணி, ரங்கநாதன், அண்ணாமலை, சொக்கநாதன், நகரத் தலைவா் ஆசைமூஷீா், முன்னாள் மாவட்டச் செயலா் பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.