வந்தவாசி: நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில், வந்தவாசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சவேரியாா்பாளையம் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ப.பாலாஜி தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வந்தவாசி நகரச் செயலா் கி.ஏழுமலை முன்னிலை வகித்தாா்.
கட்சியின் வந்தவாசி தொகுதிச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ரா.அன்பரசு, கோ.சீனுகுமாா், பி.இருதயராஜ், மு.காளிதாசன், மீ.ஜபருல்லா, து.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.