திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10,822-ஆக இருந்தது.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தைச் சோ்ந்த 140 போ், வெளியூா்களிலிருந்து வந்த 6 போ் என 146 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,968-ஆக உயா்ந்தது.
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் வியாழக்கிழமை 2 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 171-ஆக உயா்ந்தது.