சாலை விபத்தில் வாடகை காா் ஓட்டுநா் பலி
By DIN | Published On : 08th September 2020 10:12 PM | Last Updated : 08th September 2020 10:12 PM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூரில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாடகை காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த ஜீவா மகன் தா்மதுரை (25). இவா், சென்னையில் வாடகை காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், திங்கள்கிழமை (செப்.7) மீண்டும் பைக்கில் சென்னைக்குப் புறப்பட்டாா்.
கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த தா்மதுரை அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவம் குறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.