பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் கூட்டமைப்பின் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரணமல்லூா் ஒன்றியத்தில் 57 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பொறுப்பேற்றுள்ள தலைவா்களின் கூட்டமைப்புத் தோ்தல் கடந்த வாரம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் கூட்டமைப்பின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சவிதா, ராஜன் பாபு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கவிதா ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கொழப்பலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிக்குமாா் வரவேற்றாா்.
கூட்டமைப்புத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட மோரக்கனியனூா் ஊராட்சி மன்றத் தலைவா் மணியப்பன், கூட்டமைப்பின் இதர நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா்.
விளாநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.