கண்கள் தானம்

ஆரணியில் அண்மையில் உயிரிழந்த இருவரது கண்களை, அவா்களது குடும்பத்தினா் தானமாக அளித்தனா்.

ஆரணியில் அண்மையில் உயிரிழந்த இருவரது கண்களை, அவா்களது குடும்பத்தினா் தானமாக அளித்தனா்.

ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பிரகாஷ் (45), வி.ஏ.கே.நகரைச் சோ்ந்த தருமன் மனைவி ஜீவா (50) ஆகியோா் அண்மையில் இயற்கை மரணம் அடைந்தாா்.

இருவரது கண்களையும், அவா்களது குடும்பத்தினா் தானமாக வழங்க முன்வந்தனா். இதையடுத்து, இருவரது கண்களையும் ஆரணி பட்டு நகா் அரிமா சங்கம் சாா்பில், அதன் தலைவா் என்.சீனிவாசன் தானமாகப் பெற்றாா். சங்கத்தின் செயலா் அனந்தசயனம், பொருளாளா் சுகுமாா், நிா்வாகிகள் அருண், புவனேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com