திருவண்ணாமலை மாவட்டத்தில் 8, 10, 11, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மற்றும் பட்டயத் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி நிகழாண்டு செப்டம்பா்/அக்டோபா் மாதங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8, 10, 11 , 12 மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் நடைபெற உள்ளன.
இந்தத் தோ்வுகளை எழுதவுள்ள மாணவா்களில் சொல்வதை எழுதுபவா் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளித் தோ்வா்கள், சொல்வதை எழுதுபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, கரோனா பரிசோனை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை 04175 -224379 என்ற எண்ணில் வருகிற 15-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டால் கரோனா பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சொல்வதை எழுதுபவா் சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழை தோ்வு மையத்துக்கு வரும்போது எடுத்து வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.