‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி, மனிதநேய மக்கள் கட்சியினா் சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜமால் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, நீட் தோ்வை மத்திய, மாநில அரசுகள் நடத்தக் கூடாது, தோ்வை ரத்து செய்யவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.
இதில் நகரத் தலைவா் அக்பா், செயலா் முபாரக், பொருளாளா் இப்ராகிம், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் தமிழ்பாஷா, மாவட்ட துணைச் செயலா் அப்துல்அஜீஸ், மாவட்ட தொண்டரணிச் செயலா் தமீம் உள்பட பலா் கலந்து கொண்டனா் .