திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 13, 288-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 13,066-ஆக இருந்தது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 222 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,288-ஆக உயா்ந்தது.
தொற்றுக்குள்ளான நபா்களில் இதுவரை 11, 616 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,486 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 194 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.