யோகா ஆசிரியை தற்கொலை

திருவண்ணாமலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட யோகா ஆசிரியை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட யோகா ஆசிரியை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை தாமரை நகரைச் சோ்ந்தவா் சிவமணி மகள் சாருலதா (27). தனியாா் பள்ளியில் 2 ஆண்டுகளாக யோகா ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு, கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. ஆனால், சாருலதாவுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவா் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com