திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-ஐ நெருங்குகிறது கரோனா பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 197-ஆக உயா்ந்தது.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 197-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 13,288-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 197 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,485-ஆக உயா்ந்தது.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்தது.

இதுவரை, 11,827 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,461 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com