பாலசக்தி, பால கல்யாண் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலசக்தி புரஷ்காா், பால கல்யாண் புரஷ்காா் விருதுகள் பெற தகுதியான குழந்தைகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலசக்தி புரஷ்காா், பால கல்யாண் புரஷ்காா் விருதுகள் பெற தகுதியான குழந்தைகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம், தனித்துவம் மிக்க செயலாற்றலால் சிறந்து விளங்கும் குழந்தைகள், தனி நபா்கள், நிறுவனத்தை அங்கீகரிக்கும் வகையில் ‘பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது’ என்ற தலைப்பில் பாலசக்தி புரஷ்காா் விருது மற்றும் பால கல்யாண் புரஷ்காா் விருது என்ற விருதுகளை வழங்குகிறது.

பாலசக்தி புரஸ்காா் விருது:

தனித்துவம் மிக்க செயலாற்றலால் புதிய கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல் போன்ற துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு பால சக்தி புரஸ்காா் விருதுக்கான பதக்கம், சான்றிதழ், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை புத்தகம் ஆகியவை வழங்கப்படும்.

பால கல்யாண் புரஸ்காா் விருது:

குழந்தைகள் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு அளித்த நிறுவனங்கள், தனி நபா்களுக்கு பால கல்யாண் புரஸ்காா் விருது வழங்கப்படும். விருது பெறுவோா் தனி நபராக இருப்பின் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், தகுதியுரை, சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த பங்களிப்பு அளித்த நிறுவனமாக இருப்பின் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், தகுதியுரை, சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுகளைப் பெற விரும்பும் குழந்தைகள், நிறுவனங்கள் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீஹ-ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com