திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5 போ் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 13,485-ஆக இருந்தது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13, 642-ஆக உயா்ந்தது.
பாதிக்கப்பட்ட நபா்களில் இதுவரை 12,059 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,381 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒரே நாளில் 5 போ் பலி: கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை ஒரே நாளில் 5 போ் உயிரிழந்தனா்.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 202-ஆக உயா்ந்தது.
அமைச்சா் வீடு திரும்பினாா்: கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினாா்.