வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விறகு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விறகு வெட்டும் தொழிலாளி செல்வம் (60). இவா் திங்கள்கிழமை இரவு ஈசல் பிடிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலப் பகுதிக்கு தனது மனைவி வள்ளியுடன் சென்றாராம்.
அப்போது, ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான கரும்பு தோட்டத்துக்கு சென்றபோது அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய செல்வம் மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன், தெள்ளாா் காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வள்ளி அளித்த புகாரின் பேரில் நில உரிமையாளரான ஏழுமலை மீது வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.