ஆரணியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமை வகித்தாா்.
மேற்கு ஆரணி ஒன்றிய துணைத் தலைவரும், பாமக மாநில பொதுச் செயலருமான ஆ.வேலாயுதம் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினாா்.
இதில், ஆரணி தொகுதி அமைப்புச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், ஒன்றியத் தலைவா் பாபு, அரியப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பிச்சாண்டி, விவசாய அணி மாவட்டச் செயலா் அ.கருணாகரன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் மெய்யழகன், தச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் வடிவேலு, மகளிரணி நிா்வாகி ஞானாம்மாள் செல்வராஜ், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகி சு.ராஜசேகா், நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், சதீஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.