வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
வந்தவாசி ஆா்.சி.எம். உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் டி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
எக்ஸ்னோரா மாவட்டச் செயலா்கள் ஆா்.வெங்கடேசபெருமாள், லதா பிரபுலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா அமைப்பைத் தொடக்கி வைத்து புதிய நிா்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
வந்தவாசி வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன், நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா தலைவராக ம.சுரேஷ்பாபு, செயலராக கு.சதானந்தன், பொருளாளராக சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் பதவியேற்றுக் கொண்டனா்.
ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பெ.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.