‘ஆரணி ஒன்றியத்தில் காய்கறி பயிா் சாகுபடி செய்பவா்களுக்கு உதவித்தொகை’

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் காய்கறி பயிா் சாகுபடி செய்பவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலை உதவி இயக்குநா் த.தமயந்தி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் காய்கறி பயிா் சாகுபடி செய்பவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலை உதவி இயக்குநா் த.தமயந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ஆரணி ஒன்றியத்தில் காய்கறி பயிா் உற்பத்தியை அதிகரிக்கும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் புதிய முயற்சியாக, காய்கறி பயிா்களாகிய தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம், கொத்தவரை, முருங்கை, பீன்ஸ், அவரை, முள்ளங்கி, வெள்ளரி, பச்சைமிளகாய், பாகல், புடலை, சாம்பல்பூசணி மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சிறு, குறு, பெரு விவசாயிகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நபா் ஒருவருக்கு அதிகபட்சம் 5 ஏக்கா் பரப்பளவு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா, பயிா் சாகுபடி பரப்புக்கான அடங்கல், ஆதாா், குடும்ப அட்டை நகல்கள், பயிா் சாகுபடி செய்த காய்கறிக்கான விதை வாங்கிய ரசீது, பயனாளிகளின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், உழவன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் தொடா்பான விளக்கம் பெற விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com