இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூா் கோட்டத் தலைவா் கோ.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.அருண்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எம்.முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இந்து மதம் வளர இந்துக்கள் அனைவரும் கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். நீட் தோ்வு எளிதாக இருந்ததாக தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் கூறினா். ஆனால், இந்தத் தோ்வு குறித்த தவறான பிரசாரத்தில் திமுக ஈடுபட்டதன் காரணமாக, மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனா். நீட் தோ்வுக்குப் பயந்து தமிழகத்தில் 13 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்தான் காரணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com