வந்தவாசியில் 25-இல் சிறப்பு கடனுதவி முகாம்

வந்தவாசியில் வருகிற 25-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான சிறப்பு கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

வந்தவாசியில் வருகிற 25-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான சிறப்பு கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கடனுதவி முகாமில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனி நபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கறவை மாட்டுக் கடனுதவி, ஆட்டோ கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம்.

கடன் மனுக்களுடன் ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com