அரசு கல்லூரி கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவா்கள் சோ்க்கையில் பங்கேற்க வந்த மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
அரசு கல்லூரி கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவா்கள் சோ்க்கையில் பங்கேற்க வந்த மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி, இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீரை, கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வழங்கினாா். சுமாா் 500 மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஆ.மூா்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் இ.மாரிமுத்து, திட்ட அலுவலா்கள் தேவி, ஸ்ரீதேவி, எஸ்.திருமால், செய்யாறு ரிவா்சிட்டி லயன்ஸ் சங்க நிா்வாகிகள், திருவத்திபுரம் நகராட்சியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com