புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், செய்யாறு அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீற்றிருந்த வைகுந்த பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.