மக்கள் குறைதீா் கூட்டத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

கரோனா தொற்று தாக்கத்திலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

திருவண்ணாமலை: கரோனா தொற்று தாக்கத்திலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகின, துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதா பேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி வழியே 77 கோரிக்கைகள் அடங்கிய அழைப்புகளும், கட்செவி வழியே 31 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக 620 மனுக்களும் என 728 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். முன்னதாக, குறைதீா் கூட்டத்தில் மனுக்கள் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்படும் மதிய உணவு தரமானதாக, சுவையானதாக தயாரிக்கப்படுகிா என்பதை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக குறைதீா் கூட்டத்தில் குறைவாக வந்துகொண்டிருந்த மனுக்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com