தொடா் மழையால்வீடு இடிந்து சேதம்

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.
Updated on
1 min read

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

வந்தவாசி மீராகாதா்ஷா தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவா், தனக்குச் சொந்தமான வீட்டில் மரப்பட்டறை நடத்தி வந்தாா். இந்த வீடு பழுதடைந்ததால், வேறு இடத்திற்கு மரப்பட்டறையை மாற்றிக்கொண்ட பாஷா, அந்த வீட்டை காலியாகவே வைத்திருந்தாா்.

இந்த நிலையில், வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தின் காரணமாக, பாஷாவின் பழுதடைந்த வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீதமுள்ள பகுதிகளும் இடித்து அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com