வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் அரிக்குமாா் தலைமையிலான குழுவினா் வல்லம் கிராமத்தில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், சரக்கு வாகனத்தில் ராணிப்பேட்டையைச் சோ்ந்த சுந்தரவேலு, ஆனந்தன் ஆகிய இருவா் செல்வதும், சுந்தரவேலு ரூ.62 ஆயிரமும், ஆனந்தன் ரூ.51 ஆயிரமும் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.1.13 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனா்.