திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் படைவீரா்களை சிறப்புக் காவலா்களாக பணியில் அமா்த்த தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
எனவே, இந்தப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் ஏப்ரல் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தங்களது முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் தங்களுடைய வாக்காளா் அடையாள அட்டையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
ஏப்ரல் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான 4 நாள்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், உடைகளுடன் ஆஜராக வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.