செய்யாறு அருகே காா் - பைக் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், வடகல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி(49), இவரது மகன் விக்ரம் (14), இவா், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகத் தெரிகிறது.
இவா் கடந்த ஏப்.2-ஆம் தேதி தனது நண்பரான ஆதியை அழைத்துக் கொண்டு மாமண்டூா் கிராமத்துக்கு பைக்கில் சென்றாா்.
அப்போது எதிரே வந்த காா் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பைக்யை ஓட்டிய விக்ரம் மற்றும் அவரது நண்பா் ஆதி பலத்த காயமடைந்தனா்.
உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், விக்ரம் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.