கீழ்பென்னாத்தூா் அருகே கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவா், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூா்-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் முஸ்தபா, தையல் தொழிலாளி. இவரது மகன் ரசூல் (18). திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றின் படிக்கட்டில் அமா்ந்து குளித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, ரசூல் தண்ணீரில் விழுந்ததாகத் தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து ரசூலின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.