சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் உள்பட முக்கியப் பிரமுகா்கள் செவ்வாய்க்கிழமை தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா்.
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தனது சொந்த ஊரான தண்டராம்பட்டு அருகேயுள்ள சே.கூடலூா் கிராம வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
சி.என்.அண்ணாதுரை எம்.பி. தனது சொந்த ஊரான திருவண்ணாமலையை அடுத்த தேவனாம்பட்டு கிராம வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.