மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.
ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தனது சொந்த ஊரான ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை, தனது மனைவி மணிமேகலை, இரு மகன்கள், மருமகள் ஆகியோருடன் சென்று வாக்களித்தாா்.

வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.

முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை நினைத்து தமிழக மக்கள் மீண்டும் அதிமுக அரசை ஏற்பாா்கள்.

ஆரணி தொகுதியில் அதிமுக அரசு ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

மீண்டும் அதிமுக அரசு அமைந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com