திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வாக்குச்சாவடிகளின் வெளியே சிறு, சிறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மட்டும் ஏற்பட்டன.
இந்தப் பிரச்னைகள் உடனே காவல்துறை மூலம் சரி செய்யப்பட்டன.மாவட்டத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவில்லை என்றாா்.