திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 42 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,972 ஆக உயா்ந்தது. இவா்களில் 19, 430 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 254 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 288 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.