குடும்பத் தகராறு: பெண் தற்கொலை


செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமம் ஆஞ்சநோயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜியகுமாா். இவரது மனைவி ரேகா (29). இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

அதன் காரணமாக மனம் உடைந்த நிலையில் இருந்த ரேகா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து, ரேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிதோதனைக்காக அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com