போளூா்: கலசப்பாக்கம் அருகே மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் உள்ள அரசுடைமை வங்கி ஏடிஎம் மையத்தில்
பணம் வைக்கப்படாததால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசுடைமை வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, எள்ளூபாறை, சேங்கபுத்தேரி, எலத்தூா், மோட்டூா், எா்ணாமங்கலம், சோழவரம், தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம்,
கோவில்மாதிமங்கலம் என சுற்றுப்புறக் கிராம பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளனா்.
மேலும், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களும் கணக்கு வைத்துள்ளனா்.
இந்த வங்கி அருகிலேயே ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎமில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் பணம் எடுத்து வந்தனா்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல்அறிவித்தது முதல் இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த ஒரு மாதமாக பணம் வைக்காமல், வாடிக்கையாளா்கள் பணம் எடுக்கமுடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, சம்பந்தபட்ட அலுவலா்கள் உடனடியாக பணம் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாடிக்கையாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.