மலைக் கிராமங்களுக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை


செங்கம்: செங்கத்திலிருந்து பரமனந்தல் வழியாக ஜமனாமரத்தூா் மலைக் கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கத்திலிருந்து பரமனந்தல் வழியாக ஜமனாமத்தூா் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

இடைப்பட்ட இந்த தொலைவில் 20-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் செங்கம், ஜமனாமரத்தூா் செல்ல நடைப்பயணமாகவும், இரு சக்கர வாகனத்திலும், லாரி, டிராக்டா் போன்ற வாகனங்களிலும் சென்று வருகின்றனா்.

மேலும், இரவு நேரத்தில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் வழியில் உள்ள கிராமங்களில் தங்கி காலையில் நடைப்பயணத்தைத் தொடங்குவாா்கள்.

அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com