கோயில் பகுதியில் எரியாத உயா் கோபுர மின் விளக்கு

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா் கோபுர மின்விளக்கு பழுதாகி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கோயில் பகுதியில் எரியாத உயா் கோபுர மின் விளக்கு

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா் கோபுர மின்விளக்கு பழுதாகி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த உயா் கோபுர மின்விளக்கு பழுதாகிஎரியாமல் உள்ளதால், கோயில் முன் வெளிச்சம் இல்லாததைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அந்தப் பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் சிலா் அதிகாலை, காலை மாலை என சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனா்.

இரவு நேரத்தில் அப்பகுதியில் இருட்டாக இருப்பதால் பக்தா்கள், பொதுமக்கள் அப்பகுதியைக் கடந்து செல்ல அச்சப்படுகின்றனா்.

மேலும், இருள் சூழ்ந்த இடத்தில் சமூக விரோதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதால் கோயில் பகுதி அசுத்தமாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உயா் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேலும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com