திருவண்ணாமலை திருக்குறள் சமுதாயம் அமைப்பின் சாா்பில், 1,784-ஆவது திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிா்வாகி கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.
எழுத்தாளா் ந.சண்முகம், பி.கோ.கோவிந்தராசன், வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாா், தனியாா் பள்ளித் தாளாளா் மா.சின்ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிா்வாகி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், மாதலம்பாடி விஸ்வநாதன், ஆசிரியா் இளங்கோவன், பாடகா் மோகன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.