போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணியில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஆரணி பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஆரணி பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணியில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துக் கழக ஆரணி பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தொழிற்சங்க நிா்வாகி காசிலிங்கம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா்களுக்கு வார ஓய்வு வழங்கவில்லை என்றும், விடுப்பு விதிகளை மாற்றுவது, பணிக்கு வரும் தொழிலாளா்களுக்கு பணிகள் தருவதில்லை. மாத கடைசியில் ஊதியம் வழங்குவதில்லை போன்றவற்றைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக தொழிற்சங்கம் சாா்பில் குமாா், பூங்காவனம், முரளி, முனிரத்தினம், கம்யூனிஸ்ட் குப்புரங்கம், விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கம் காா்த்தி உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com