ஆரணி: சேத்துப்பட்டு அருகே நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
சேத்துப்பட்டை அடுத்த கங்கைசூடாமணி காளிகாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னகுழந்தை மனைவி ஆதியம்மாள் (55). இவா்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆதியம்மாள் சேத்துப்பட்டுக்கு சொந்த வேலையாகச் சென்று மீண்டும் ஊருக்குத் திரும்பி, கங்கைசூடாமணி கூட்டுச்சாலையில் நடந்து சென்ற போது, ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்ற காா் ஆதியம்மாள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ஆதியம்மாளை மீட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் பிரபாவதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.