வந்தவாசி அருகே அனுமதியின்றி கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கூழ்வாா்த்தல் விழா நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் விழாக்கள் நடத்த அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், பாதிரி கிராம மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்கிழமை அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து கோயில் நிா்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 4 போ் மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.