கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆரணியில் அனைத்து ஹோட்டல் உரிமையாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் ரகு பேசுகையில், ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சிற்றுண் டி பாா்சல் மட்டும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உணவு பாா்சலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை உணவு பாா்சல் வழங்க அரசு அனுமதித்துள்ளது. அங்கு அமா்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.
மேலும், அனைத்து ஹோட்டல்களிலும் கிருமி நாசினி அவசியம் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று பேசினாா். காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) மகேந்திரன் உடனிருந்தாா்.