திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 19 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.
சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனையில் 50 போ் தங்கி சிகிச்சை பெறும் வகையில், அரசு சாா்பில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த சிகிச்சை மையத்தில் சேத்துப்பட்டு, போளூா், கலசப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த கரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில், கரோனா சிகிச்சை பெற்று வந்த 19 போ் பூரண குணமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவமனை நிா்வாகி, மருத்துவப் பணியாளா்கள் அவா்களை வழியனுப்பி வைத்தனா்.