திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் மற்றும் ஆரணி தச்சூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய மையங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்காக 171 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் நுண் பாா்வையாளா்களின் பணி, அவா்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் துணைப் பதிவாளா் சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.