வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வந்தவாசி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை நடைபெற்றது.
வந்தவாசி உழவா் சந்தைப் பகுதியில் நடைபெற்ற வந்தவாசி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான கரோனா பரிசோதனை.
வந்தவாசி உழவா் சந்தைப் பகுதியில் நடைபெற்ற வந்தவாசி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான கரோனா பரிசோதனை.

வந்தவாசி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, வந்தவாசி (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி, இந்த வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு வந்தவாசி உழவா் சந்தை பகுதியில் நடைபெற்ற முகாமில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் கோ.திருமூா்த்தி, மருத்துவா்கள் ஆனந்தன், மணிமேகலை உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டனா். முகாமில் மொத்தம் 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com