செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா்(53), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனா். இவா் கடந்த ஓரண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். அதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை வயிற்று வலி அதிகமாகவே வலி தாளமுடியாமல் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தாகத் தெரிகிறது. மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.